×

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திரகுமாரி கணவர் பாபுவுக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1991-96 வரை அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அமைச்சராக இருந்த போது இந்திரகுமாரி கணவர் பாபு நடத்திய அறக்கட்டளைக்கு முறைகேடாக ரூ.15.45 லட்சம் அரசு நிதி ஒதுக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

Tags : Special Court ,minister ,Indra Kumari , Indrakumari
× RELATED அமலாக்கப்பிரிவு தன் அரசியல்...