×

கர்நாடகாவில் 2 ஈரானியர் கைது: ரூ1 கோடி போதை பொருள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2 ஈரானியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பிடாடி நகர் அருகே குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோத வகையில் ஈரான் நாட்டை சேர்ந்த 2 பேர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அந்த குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள மரிஜுவானா என்ற போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 130 மரிஜுவானா செடிகள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் கைப்பற்றி, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Iranians ,Karnataka , 2 Iranians arrested in Karnataka: Rs 1 crore drug seized
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!