சென்னை: தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தென்சென்னை மாவட்ட பாஜ தலைவராக சிறப்பாக பணியாற்றி யவர் சைதை சந்துரு. அவர் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளித்தது. அவர் இன்று இல்லை என்பதை நம்பத்தான் என் மனம் மறுக்கிறது. சிறுவயதிலேயே மக்கள் பணியில் ஆர்வம் கொண்டு பல்வேறு தொண்டுகள் புரிவதில் தன் பங்களிப்பை நிலைநாட்டிய சைதை சந்துரு காலமானதால், அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.