×

நீட் தேர்வால் எனது குடும்பத்தில் நடந்த தற்கொலை: சாய் பல்லவி உருக்கம்

சென்னை: நீட் தேர்வு பிரச்னையில் நான் மாணவர்கள் பக்கம் நிற்பேன் என்று நடிகை சாய் பல்லவி கூறியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையும், டாக்டருமான சாய் பல்லவி நீட் தேர்வு குறித்து கூறியிருப்பதாவது: மருத்துவம் என்பது ஒரு கடல் போன்ற படிப்பு. இதில் நீட் தேர்வின்போது எதிலிருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களும் நண்பர்களும்தான் தேர்வு எழுதுகிறவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

என் குடும்பத்திலும் நீட் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது. என் குடும்பத்தில் உள்ள ஒருவர் மதிப்பெண் குறைந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டு விட்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை. தற்கொலை செய்து கொள்வது குடும்பத்தை ஏமாற்றும் செயல். தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று என்னால் எளிதில் பேசிவிட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். அந்த தேர்வை அவர்கள் எந்த நிலையில் இருந்து எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும். பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் வலியை உணர்கிறேன். பிரச்னைகளையும் உணர்கிறேன். நான் எப்போதும் அவர்கள் பக்கம்தான். இவ்வாறு சாய் பல்லவி கூறினார்.

Tags : NEET ,Sai Pallavi , Neet selection, Sai Pallavi
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...