வாலாஜாபாத்: வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ராஜகுலம் ஊராட்சியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பூபாலன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர். மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு, தேர்தலில் வாக்கு சேகரிப்பது குறித்தும், தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்து ஆலோசனை வழங்கினர்.
இதில், ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சிவிஎம் சேகர், திமுக ஒன்றிய நிர்வாகிகள் வேதாச்சலம், பழனி தேவேந்திரன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.