×

பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எஸ்பிஐ வங்கியைப் போன்று 4-5 வங்கிகள்இந்தியாவிற்கு தேவை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!!

டெல்லி : பாரத ஸ்டேட் வங்கியை போல மேலும் 4 அல்லது 5 வங்கிகள் இந்தியாவிற்குத் தேவை என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் நிதித்தும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாறிவரும் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையின் தேவைகளை எதிர்கொள்வதற்கு வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் சங்கத்தின் 64-வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்துகையில் வங்கி துறையினரிடம் தமது கருத்துக்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் “பொருளாதாரம் முற்றிலும் மாறுபட்ட நிலையை நோக்கி நகரும்  விதம், தொழில்துறையை மாற்றி அமைக்கும் விதம் ஆகியவற்றால் பல புதிய சவால்கள் எழுகின்றன. இவற்றை எதிர்கொள்வதற்கு கூடுதல் வங்கிகள் மட்டுமே போதாது, மிகப்பெரிய வங்கிகளும் தேவை”, என்று வலியுறுத்தினார். மேலும், எதிர்காலத்தில் இந்திய வங்கிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கற்பனை செய்யுமாறு தொழில்துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “கோவிட் தொற்றுக்குப் பிந்தைய நிலவரத்தை நாம் பார்த்தோமேயானால், இந்தியாவில் வங்கிகளின் நிலை சற்று வித்தியாசமானதாக, பிரத்தியேகமானதாக இருக்கும். அதில் மின்னணுமயமாக்கல் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளால் பெருந்தொற்றின் போது தங்களது வாடிக்கையாளர்களை முறையாக சென்றடைய முடியாத நிலையில், நேரடி பண பரிமாற்ற முறை மற்றும் மின்னணு முறைகளின் வாயிலாக சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வங்கி கணக்குகளின் உரிமைதாரர்களுக்கு நாம்  பணத்தை பரிமாற்றம் செய்ய இந்திய வங்கிகளின் மின்னணுமயமாக்கல் உதவிகரமாக இருந்தது.”என்று கூறினார்.


Tags : India ,SBI Bank ,Minister ,Nirmala Sitharaman , நிர்மலா சீதாராமன்,பாரத ஸ்டேட் வங்கி
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...