ராணிப்பேட்டை: அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக கிராமப்புறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்பொழுது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக ஆட்சி முடியும் பொழுது உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் என்றார். தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான புதிய பேருந்துகளை வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டு காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கிராமப்புற பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என்று உறுதியளித்தார்.