சென்னை: சென்னை பேரூரில் 300 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற காரை போக்குவரத்து போலீஸ் மடக்கிப்பிடித்துள்ளனர். போரூர் சுங்கச்சாவடி அருகே சந்தேகிக்கும் படி சென்ற காரை போக்குவரத்து போலீஸ் மடக்கிப்பிடித்து சோதனை செய்துள்ளனர். போலீசார் நடத்திய சோதனையில் காரில் 300 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.