சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆதரவு கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, சரத்பவார் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்த நிலையில் கடிதம் எழுதியுள்ளார்.