சென்னை: நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 ஒன்றிய அரசு காலிப்பணியிடங்களுக்கு வரும் ஜனவரி, பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 25ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.