சென்னை: ஆணவ படுகொலைகளை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆணவக்கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.