×

தி.மு.க., சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோடு : ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு எம்.எஸ்.கே. நகரில் தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க., ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். பகுதி கழக செயலாளர்கள் ராமச்சந்திரன், நந்தகோபால், அக்னிசந்துரு, மணிகண்டராஜா, தி.மு.க., நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை ராஜா என்ற குணசேகரன் செய்திருந்தார். இதில், லோகசந்திரன், சந்திரசேகர், முனிராஜ், பால்ராஜ், சுந்தரம், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK , Erode: Erode Surampatti Dam MSK. DMK in the city. Welfare assistance for the disabled on the occasion of the three major festivals
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...