கடலூர்: விருத்தாசலம் கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குப்பநத்தம் புதுகாலணியை சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி தம்பதி 2003 ஜூலை 8ல் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.