நீலகிரி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கில் கோடநாடு எஸ்டேட்டை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. தினேஷ் உடன் பணியாற்றிய எஸ்டேட் ஊழியர்கள் இருவரிடமும் தனிப்படை விசாரணையை மேற்கொண்டது. கடந்த 21ம் தேதி தினேஷின் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.