×

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் இரு குழுக்களாக பிரிந்து மோதல்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் இரு குழுக்களாக மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தூர் வழியாக சென்ற பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்க வெங்கடாச்சலபுரம் சந்திப்பில் அதிமுகவினர் கூடி இருந்தனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் ஒருபிரிவினர் திரண்டிருந்தனர். பழனிசாமி வாகனம் வெங்கடாச்சலபுரம் சந்திப்பை கடந்து சென்ற போது ராஜேந்திரபாலாஜி ஒழிக்க என்று சிலர் முழக்கமிட்டனர்.

Tags : Edibati Palanisami ,Sathur, Wardunagar district , Sattur, Edappadi Palanisamy, AIADMK, Conflict
× RELATED அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்...