நெல்லை: தேர்தல் அலுவலர் பயிற்சி காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அலுவலர் பயிற்சி நடைபெறுவதால் நெல்லை மாவட்டத்தில் நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.