×

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்: 3 பேர் சுட்டுக்கொலை..!

ஸ்ரீநகர்: இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை துணை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியா- பாகிஸ்தான் எல்லையான ஜம்மு-காஷ்மீருக்குள் அவ்வப்போது பயங்கரவாதிகள் நுழைந்து இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

மேலும், , இந்திய - பாகிஸ்தான் எல்லையான உரி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இன்று அதிகாலை 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதுகுறித்த ரகசிய தகவல் ராணுவத்துக்கு கிடைத்தது. உடனடியாக பயங்கரவாதிகள் நுழைந்த பகுதியை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே பேசியதாவது: ஜம்முகாஷ்மீருக்குள் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து அதிநவீன இயந்திர துப்பாக்கிகள், சக்திவாய்ந்த வெடி பொருட்கள், கையெறி குண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்முகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் நுழைந்து சதித்திட்டத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Tags : Indian Army ,Indian border , Indian border, militants, Indian army
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...