×

4 மாத அரசு சாதனைகளால் உள்ளாட்சி தேர்தலில் திமுக 100% வெற்றி பெறும் : வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

வாணியம்பாடி : அரசின் சாதனைகளால் உள்ளாட்சி தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெறும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் திமுக பொறுப்பாளராக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:

திமுக அரசின் 4 மாத சாதனைகளால், உள்ளாட்சி தேர்தலில் திமுக மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடிய அளவில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் குவாரியே இல்லை. அப்படி இருந்தால்தானே ரசீது இருக்கும். ஆனால், லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ₹60 லட்சம் மதிப்பிலான 551 யூனிட் மணல் குவியல் சிக்கியது எப்படி? கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கே.சி.வீரமணி எப்படி இருந்தார். அவர் தற்போது எப்படி இருக்கிறார்.

அவருக்கு வசதி எப்படி வந்தது என்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
அதிமுக ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அதிமுக ஆட்சியில் பணியிட மாறுதலுக்கு அமைச்சர்கள் எத்தனை லட்சம் வாங்கினார்கள்? என்ன செய்தார்கள்? என்று அரசு ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கினார்கள். மக்களுக்கு நல்வாழ்வே இல்லை. மந்திரிகளுக்கு மட்டுமே நல்வாழ்வு. திமுக அரசின் 4 மாதங்களில் மக்களுக்கு நல்வாழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister of Agriculture R. Q. ,Paneer , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...