×

தங்க கடத்தலுக்கு உதவியதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி வீட்டில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்

சென்னை: தங்க கடத்தலுக்கு உதவியதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி வீட்டில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலால் திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதியில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர். சோதனையின் போது 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து 4 பேரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags : Chennai airport ,Customs Officer ,home Revenue Intelligence Division , Gold, smuggling
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்