சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை தாம்பரம், ஆவடி உள்பட 3ஆக பிரிக்க முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெறுகிறது. தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையர்களாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றியும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.