சென்னை: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 கிலோ ஹெராயின் கடத்தல் தொடர்பாக சென்னையை சார்ந்த தம்பதி சுதாகர், வைஷாலி கைது செய்யப்பட்டனர். கைதான சுதாகர் சென்னை துறைமுகத்தில் பணியாற்றியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சுதாகர் தமிழ்நாட்டிற்குள் கடல் வழியே ஏதேனும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.