×

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையொட்டி, வாலாஜாபாத் ஒன்றியத்தின் 61 ஊராட்சிகளுக்கும், 21 ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் போட்டியிட்டு, ஏராளமானோர் தினமும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இந்நிலையில், இன்று மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், முத்தியால்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆர்.வி.ரஞ்சித்குமாரின் மனைவி பிரேமா ரஞ்சித்குமார் மற்றும் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அன்பழகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். முன்னதாக வாலாஜாபாத் ரவுண்டானாவில் இருந்து வாண வேடிக்கைகளுடனும், தாரை தப்பட்டைகள் முழங்க வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தனர்.

Tags : Union Councilor , Candidates petition for the post of Union Councilor
× RELATED கீழப்பாவூர் அருகே ரூ.6 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி