×

அடுத்த மாதம் திருமண ஏற்பாடு நடக்கும் நிலையில் காதலனுடன் நடிகை நீரில் மூழ்கி பலி: கார் மூழ்கியதால் கோவாவில் சோகம்

பனாஜி: கோவாவில் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் காதலனுடன் சேர்ந்து நடிகை நீரில் மூழ்கி இறந்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே (25), அவரது காதலன் சுபம் டெட்ஜ் (28) என்பவருடன் கோவா நோக்கி காரில் ெசன்றனர். பாகா - கலங்குட்டே சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அர்போரா கிராமத்திற்கு அருகே உள்ள குறுகிய சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் உள்ள சிற்றோடையில் விழுந்து கவிழ்ந்தது. காருடன் சேர்ந்து நடிகையும், அவரது நண்பரும் மூழ்கினர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர்.

சிற்றோடையில் கிடந்த கார் மற்றும் இருவரது சடலங்களையும் கிட்டத்தட்ட பல மணி போராட்டங்களுக்கு பின் மீட்டனர். கைப்பற்றப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஞ்சுனா காவல் நிலைய பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் சூரஜ் கவாஸ் கூறுகையில், ‘வேகமாக சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால்  எதிர்பாராத விதமாக சிற்றோடைக்குள்  விழுந்து மூழ்கியது. பின்னர் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, இருவரின்  சடலங்களையும் வெளியே எடுத்தோம்.

இருவரும் இறந்த சம்பவம் குறித்து, இருவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்துள்ளோம். விபத்தில் பலியான இருவரும் அடுத்தமாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே, மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Goa , Wedding arrangement, boyfriend, actress, kills
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...