சென்னை: பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, செல்லூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.