×

தேவகோட்டையில் பாஜ நிர்வாகி வெட்டிக்கொலை

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பெரிய காரை கிராமத்ைத சேர்ந்தவர் கதிரவன் (40). பாஜ ஒன்றிய பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும் காவனவயலை சேர்ந்த பெரியசாமி, வீரா என்ற வீரபாண்டி ஆகியோருக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலை காவனவயல் விலக்கு பைபாஸ் சாலை அருகே பாஸ்ட் புட் கடையில் கதிரவன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் பெரியசாமியும், வீரபாண்டியும் வந்தனர்.

திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கதிரவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த கதிரவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். சிவகங்கையில் கடந்த வாரம் பாஜ நிர்வாகி பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தேவகோட்டையில் மேலும் ஒரு பாஜ நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : BJP ,Devakottai , BJP executive assassinated in Devakottai
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...