கோவை: பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில், பொள்ளாச்சி நகர அதிமுக மாணவர் அணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோவை கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்தது. இதன் நகல் நேற்று ஆஜரான 9 பேருக்கு வழங்கப்பட்டது.