டெல்லி: கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்களின் வேலை மறுசீரமைப்பு செய்யப்படும் வரை அவர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் சுரங்கங்களை மூடுவதால் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றன, சுரங்கம் மீண்டும் தொடங்கும் வரை அவர்களுக்கும் மாதம் ரூ.5000 வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.