×

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளி கருகி பலி

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி - வெம்பக்கோட்டை சாலையில், சரஸ்வதிபாளையத்தில் கோடீஸ்வரன் (58) என்பவருக்கு சொந்தமான கேப் வெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பொட்டு வெடி, ரோல்கேப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. தயாரான ரோல்கேப் வெடிகளில் காகிதங்களை  கத்தரித்து வெட்டி எடுக்கும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கேப் வெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறி, அறையின் மேற்கூரை சேதமடைந்தது. அங்கு பணியில் இருந்த சின்னபொட்டல்பட்டியை சேர்ந்த சின்னமுனியப்பன் (60) உடல் கருகி பலியானார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


Tags : Sivakasi , Worker burnt to death in a firecracker factory accident near Sivakasi
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...