×

கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த ரூ.5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால், கடந்த ஆகஸ்ட் மாதம் வட்டியாக கிடைத் தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது. இந்த தகவலை திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : Artist Foundation ,Chief Minister ,MK Stalin , Rs 2 lakh financial assistance to 8 people on behalf of the Artist Foundation: Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...