பெங்களூரு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெங்களூருவில் ஜிதேந்தர் சிங் என்பவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். ராணுவ அதிகாரி போல வேடமிட்டு வந்த ஜிதேந்தர் சிங், ராணுவப் பாசறைகளை புகைப்படம் எடுத்துள்ளார். உளவுப்பிரிவு அலுவலகம் உள்ள இடங்களில் சுற்றித் திரிந்து தகவல்களை ஜிதேந்தர் சிங் திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.