திருச்சி: வளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று மழை பெய்யும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் பரவலாக நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுகை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் இன்று அதிகாலை 3 மணியில் காலை 6.30 மணி வரை மழை பெய்தது.