சென்னை: தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நத்தம் விஸ்வநாதனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், இந்திய தேர்தல் ஆணையம் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வேட்புமனுவில் தகவல்களை மறைத்து, பணப்பட்டுவாடா செய்து வெற்றிபெற்றதாக திமுகவின் ஆண்டி அம்பலம் மனு தொடர்ந்திருந்தார்.