சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் புதிய முதல்வராக சரண்ஜித் பதவியேற்றார். பஞ்சாப் முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டார்.