திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுத்தால் நிறுத்தப்பட்டிருந்த மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. 2வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு 500 மெகாவாட் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 2வது அலகில் கொதிகலன் பழுது காரணமாக கடந்த 16ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.