×

டெல்லிக்கு தான் இந்த முறை கோப்பை: ரிஷப் பன்ட் பேட்டி

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் அளிததுள்ள போட்டி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகவும் சூடாக இருக்கிறது. எனது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் முடிந்தவரை பால்கனியில் உட்கார்ந்து நிலைமைகளுக்குப் பழகிக்கொள்ள முயன்றேன். ஐபிஎல் கோப்பையை வெல்வதே எங்கள் இறுதி இலக்கு. ஆனால் நாங்கள் எங்கள் செயல்பாட்டில் கவனம் செலுத்தப் போகிறோம்.

சீசனின் முதல் பாதியில் நாங்கள் விளையாடிய விதத்தில் தொடர்ந்து விளையாடலாம், இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறோம், என்றார். டெல்லி முதல் போட்டியில் வரும் 22ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

Tags : Cup for Delhi ,Rishop Pant , This time the trophy is for Delhi
× RELATED ஜனவரி மாதத்தின் சிறந்த வீரர் ரிஷப் பன்ட் :ஐசிசி அறிவிப்பு