×

புழல் சிறையில் விளையாட்டு அல்-உம்மா தீவிரவாதியை பாம்பு கடித்தது

சென்னை: சென்னை புழல் மத்திய தண்டனை சிறையில், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுமார் 850க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை சிறை வளாகத்தின் உள்ளே சில கைதிகள் நடைபயிற்சி சென்றனர். அப்போது ஒரு சாரைப்பாம்பு அங்கு ஓடியது. இதைப் பார்த்த, அல்-உம்மா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பிலால் மாலிக்(32) என்ற கைதி, பாம்பை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில்,  எதிர்பாராதவிதமாக அந்த பாம்பு  பிலால் மாலிக்கின் வலது கையில் கடித்தது. இதனால், வலியால் அலறி துடித்தவாறு பாம்பை தூக்கியெறிந்தார். இதனையடுத்து, அங்கிருந்து தப்பியோடிய பாம்பை சக கைதிகள் அடித்து கொன்றுவிட்டு,  பிலால் மாலிக்கை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  இது குறித்து, புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Punjab , Roaring prison, al-umma extremist, snake
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்