×

திருமணம் நின்றதால் மன உளைச்சல் டிக்டாக் புகழ் அபிராமியின் தம்பி தூக்கிட்டு தற்கொலை

பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேரந்தவர் அபிராமி (30). டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கடந்த 2018ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொடூரமான  முறையில் கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தியது. அபிராமியின் தம்பி பிரசன்னா மணிகண்டன் (28), மாங்காடு அடுத்த பெரிய பணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர்,  பெரம்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த இருதரப்பு பெற்றோர், இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

 கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், அபிராமி விவகாரம் இளம்பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்தினர். அந்த இளம்பெண்ணும் பிரசன்னாவின் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த  பிரசன்னா, நேற்று  முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். அடுத்த மாதம் அபிராமியின் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில், அவருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மன  உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Abrami , Marriage, depression, dictatorial fame Abrami, hanged suicide
× RELATED சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி