×

கோவையை போல சென்னையிலும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஆலோசித்து முடிவு: ககன்தீப் சிங் பேட்டி

சென்னை: இன்னும் ஒரு மாதத்தில் சென்னை முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டியளித்துள்ளார். முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் இன்று பங்கேற்றார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இன்னும் ஒரு மாதத்தில் சென்னை முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெறும் முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசி முகாமுக்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர் பேசியதாவது: தேவை இருந்தால் கோவையை போல சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,Gakandeep Singh , Chennai, Corporation Commissioner
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...