×

இன்னும் ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு: மாநகராட்சி ஆணையர் பேட்டி.!

சென்னை: இன்னும் ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டியளித்துள்ளார். முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற ககன்தீப் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், நாளை நடைபெறும் முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசி முகாமுக்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Commissioner of , Chennai, Vaccine, Corporation
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...