சென்னை: பெரியாரின் பிறந்தநாளை யொட்டி பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், ‘‘ எந்த சக்தியாலும் பெரியாரை வீழ்த்த முடியாது. அவர் தனிநபர் அல்ல. மக்கள் விடுதலைக்கான கருத்தியல். சமூக நீதிக்கான அடையாளம்’’ என்றார்.