×

கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட் ஆணை

சென்னை: அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதல்வரை நிர்பந்திக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளித்திருந்தார். வழக்குகளின் விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் மீது அக்டோபர் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : BC ,Q. ,Stalin , Defamation case, MK Stalin, iCourt
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...