ஈரோடு: கோபியில் அரசு ஒப்பந்ததாரனின் பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருடுபோனது. சாமிநாதன் ரூ.1 லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்துள்ளார்; பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்த போது மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.