சென்னை: சென்னை கே.பி.பார்க் குடியிருப்புகளின் தரம் பற்றி ஆய்வு செய்த குழு முதற்கட்ட ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. சென்னை ஐஐடியை சேர்ந்த க்யூப் என்ற நிறுவனம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. இறுதி முடிவுகள் கொண்ட ஆய்வறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.