சென்னை: தொழில் செய்வதற்கு ஏற்ற, வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மின்வசதி மற்றும் திறன்மிகு பணியாளர்கள் என முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலம் தமிழகம். தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்க ஒற்றை சாளர முறையும் பின்பற்றப்படுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.