சென்னை: டிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.