சென்னை: ஆகஸ்ட் 31க்கு முன் யார்? யார்? கொரோனாவால் இறந்தார்கள் என ஆய்வு செய்து சான்றிதழ் தர உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 31க்குள் இறப்பு சான்றிதழ்களை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறப்பு சான்றிதழ்கள் வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து இறந்தவர்களுக்கு கொரோனாவால் இறந்தார் என சான்றிதழ் தர கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.