காட்பாடி: டெல்லி போராட்டத்தில் 100 விவசாயிகள் இறந்தும் செவி சாய்க்காத ஒன்றிய அரசு மாணவர்கள் இறப்புக்கா செவிசாய்க்கும் என காட்பாடியில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபின் துரைமுருகன் அளித்த பெட்டியில் கூறியுள்ளார். நீட் தேர்வு என்னும் கொடிய அரக்கனை ஒன்றிய அரசு ஏவி உள்ளதாக துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.