×

பேருந்து மீது மோதல் கார் எரிந்து 5 பேர் பலி: ஜார்கண்ட்டில் பயங்கரம்

ராம்கார்: ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்பற்றி எரிந்ததில், 5 பேர் கருகி பலியாகினர். ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் மாவட்டத்தில் உள்ள ராம்கார்- கோலா சாலையில் நேற்று காலை கார் ஒன்று சென்றது. அப்போது, எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனால், கார் தீப்பிடித்து எரிந்தது. கார் நொறுங்கியதால் அதில் பயணம் செய்த 5 பேரும் காரை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கினர். இதனால், அவர்கள் காருக்குள்ளேயே கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள். மற்றொருவர் 18 வயது நிரம்பாத சிறுவன். இவர்கள் பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Jharkhand , 5 killed in car-bus collision: Terror in Jharkhand
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...