×

திருப்பூரில் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

திருப்பூர்: திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அப்பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. சில பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள்.

அந்தவகையில் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கொரோன தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 220 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் 11 ஆசிரியர்களுக்கும் கோரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 8 மாணவர்களுக்கு கோரோன நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அந்த பள்ளிக்கு இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் (15ம் தேதி முதல் 17ம் தேதி வரை) என 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களிடம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த பள்ளியில் 9ம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Tirupur , Tirupur, Students, Corona, Holidays
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...