×

எம்.எல்.ஏக்கள் விடுதியில் இறகுப்பந்து விளையாட்டு கூடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்

சென்னை : சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இறகுப்பந்து விளையாட்டு கூடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி அமைந்துள்ளது. அங்கு ரூ. 4.29 கோடி மதிப்பில் இறகுப்பந்து விளையாட்டுக் கூடம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து மைதானத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் முதல்வர் ஸ்டாலின் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இறகுப்பந்து கூடத்துடன் சிவானந்தா சாலையில் இருந்து குடியிருப்பு செல்லும் வழியில் இருபுறமும் நடைபாதையுடன் கூடிய பூங்காக்கள் மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மழைநீர் கால்வாயுடன் கூடிய நடிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.   



Tags : Chief Minister ,MK Stalin ,MLAs Hotel , முதல்வர் மு.க.ஸ்டாலின்
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...